கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டில் உள்ள இரட்டை கிணற்று தெருவில் 15 நாட்களாக வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாததாலும், தேங்கியுள்ள மழை நீரால் மலேரியா, டெங்கு போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துக்கள் தெருக்களில் உலாவி வருகிறது இது சம்பந்தமாக அப்பகுதி குடியிருப்பு மக்கள் வார்டு கவுன்சிலருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். எனவே உயிர் பலி, அசம்பாவிதம் ஏற்படும் முன் வார்டு கவுன்சிலரும், அதிகாரிகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை இழந்துள்ளது.
0 கருத்துகள்