உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை கடம்பவனம் இளைஞர் மன்றம் சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நாளை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் ஸ்ரீ மீனாட்சி காலேஜ் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை, கடம்பவனம் இளைஞர் மன்றம்  உறுப்பினர்கள் பாலா (எ) வசந்தகுமரன், சுபாஷ், நிர்மல்குமார், ரமேஷ்  இவர்களுடன் ஸ்ரீ மீனாட்சி காலேஜ் நிறுவனர் டாக்டர். கோபிநாத்  இணைந்து '100' மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 




கருத்துரையிடுக

0 கருத்துகள்