விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு திட்டம் ஒரு ஏமாற்று வேலையா?...


கோவை மாவட்டம் பல்லடம் மின் பகிர்மான பகுதியின் கீழ் சாலைப்புதூர் கிராமம் வருகிறது. சாலைப்புதூர் கிராமத்தில் மொத்தம் 330 விவசாயிகள் இலவச மின் இணைப்பு வழங்க தேர்வாகியுள்ளனர். முதற்கட்டமாக 217 பேருக்கு இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 192 பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டதாக மின்வாரிய இணைய தளத்தில் தகவல் வெளிடப்பட்டது. மின்சார கம்பங்களில் ஒரு மின்பெட்டியை கட்டி வைத்து, அதில் விவசாயிகள் போல யாரையோ நிறுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர். 

விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது போல் கணக்கில் காட்டுவதற்காக இப்படி புகைப்படம் எடுத்து, மின்வாரிய இணையத்தில் பதிவேற்றி யிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், மின் இணைப்பு கொடுக்காமலேயே, இணைப்பு கொடுக்கப்பட்டது போல தவறான தகவல்களை அரசுக்கு கொடுத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மீதமுள்ள விவசாயிகளுக்கும் இலவச மின்சார இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தமிழக விவசா யிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப் பட்டது. அதை தொடர்ந்து 3 நாட்களில் 27 பேருக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்