மதுரையில் "தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம்"


மதுரை ஆரப்பாளையம் மேலப் பொன்னகரம் பாரதியார் தெருவிலுள்ள சிஐடியூ மாவட்ட மைய அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் செ.ரத்தினமாலா தலைமையில் நடைபெற்றது.  மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, சிஐடியூ பொறுப்பு நிர்வாகி மாலதி சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.பாக்கியம் வரவேற்புரை ஆற்றி னார்.  முடிவில் மாநில பொருளாளர் எம்.தேவமணி நன்றி கூறினார். இதில் 32 மாவட்டங் களிலிருந்தும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்கள், செயல்படாத 2 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் உள்ள செல்போன்களை 29.06.2022 அன்று மாநிலம் முழுவதும் அந்தந்த வட்டார திட்ட அலுவலர்களிடம் ஒப்படைப்பது என்றும், 30.06.2022 அன்று ஊழியர்களின் தீர்க்கப்படாத சின்ன, சின்ன பிரச்சனைகளை பலமுறை தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இயக்குநரை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், 

ஊழியர்கள் பணியின் தற்போதைய நிலை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என்பது மிகமிக அதிகமாகி வருகிறது. ஊழியர்கள் மனநிலை அதிகம் பாதிக்கும் நிலைஉருவாகி உள்ளது. இதன் விளைவாக தற்கொலை முயற்சி, உடல்நிலை பாதிப்பு இளம் வயதிலேயே இறப்பு போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.  (இந்த திட்டத்தில் இதற்கு முன் இருந்த இயக்குனர் இதே பணியை ஊழியர் நலன் திட்டப்பணி பரிசு என ஊக்கமளித்து வழி நடத்தினார்கள். அதோடு இரண்டு இயக்குனர்கள் ஊழியர்கள் நலனிலும் அக்கரை கொண்டு திட்டத்தை வழி நடத்தி மத்திய அரசின் பரிசும், பாராட்டும் பெற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.) தற்போதைய இயக்குனர், ஊழியர் மற்றும் உதவியாளர் நலன் பற்றி அக்கறை இல்லாமல் ஊழியர்களின் சின்ன சின்ன பிரச்சினைகளைக் கூட சரிசெய்யமால் அவற்றை போராடி பெற வேண்டிய நிலைக்கு ஆளாக்கு கின்றனர் என்றும், 

மேலும், சங்கத்தின் சார்பாக கோரிக்கை களை தெரிவித்தும் அவற்றை பேசி தீர்க்க முன்வர வில்லை. வறுமைக் கோட்டிலுள்ள விதவைகள், கணவணால் கைவிடப்பட்ட பெண் ஊழியர்களை மிகுதியாக கொண்ட மிகப்பெரிய துறை என்பதை நினைவில் ஏற்க மறுக்கிறார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு தேதி கேட்டு மெயில் அனுப்பினால் உடனடியாக வீடியோ காலில் தொடர்பு கொண்டு "உனக்கு என்ன பிரச்சினை" என்று கேட்கிறார்கள். 

சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பிரச்சினைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று சொன்னால் 'ஏன் உன்னை உங்கள் ஊழியர்கள் நம்பமாட்டார்களா?' என்று கேட்கிறார்கள் என்றும், 

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சினைகளை பேச மறுக்கும் இயக்குனர் குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விப் பணி ஊட்டச்சத்து மற்றும் குழந்தை வளர்ச்சிப்பணி என இரண்டு துறை பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். செய்த பணிகள், அனைத்தையும் பதிவேடுகளிலும் பதிவு செய்துக்கொண்டு, அதேபணியை செல்போனிலும் பதிவு செய்துக்கொண்டு இருக்கிறோம். செல்போனில் ஏற்கெனவே காம்கேர் என்ற ஆஃப் பில் பதிவு செய்தோம். தற்போது போசான்டிராக்கரில் செய்கிறோம் என்றும், 

தில் அனைத்து பதிவுகளும் ஆங்கிலத்தில் உள்ளது. சேர்க்கை நீக்கல் எதுவும் பார்க்க இயலாது. அனைத்தும் நெட் ஓர்க் கிடைக்காத காரணத்தால், டபுள் என்ட்றி வரும். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஊழியர்கள் சமாளிக்க வேண்டும். 

இத்தனை பணிகளையும் செய்து கொண்டு இருக்கும் ஊழியர்கள் செல்போன் கைதவறி விழுந்தால் கூட சம்பளப் பணத்தில் ரிப்பேர் செய்கிறோம் என்றும், இரண்டு வருடங்கள் கேரண்டி நான்கு வருடம் முடிந்த பின்னர் ரிப்பேர் என்றால் ஒவ்வொரு முறையும் கட்டாயப் படுத்தி ரூ.2000 எங்களது சம்பளத் தொகையிலேயே கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லி  மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவது சரியானதல்ல என்றும்,

ஊழியர்கள் நலன் குறித்தும் பணியின் தற்போதைய நிலை குறித்தும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பேசாமல் இருப்பது சரியா? நாங்கள் உங்களிடம் தான் என்ன கேட்டோம் எனவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 ஆண்டுகள் முடித்தவர் களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டு முடித்த ஊழியர் உதவியாளர்களுக்கு அரசு அரிவித்த  ஊக்கத் தொகை வழங்கிடவும், 



3 வருடம் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு ஏற்கனவே கொடுத்தது போல் பதவி உயர்வு கொடுக்க வேண்டும். மினி மைய ஊழியருக்கு 10 ஆண்டு பதவி உயர்வில் சென்ற மினி மைய ஊழியருக்கு முடித்த வர்களுக்கு ஒரு இங்கிரிமெண்ட் கூடுதலாக கொடுக்கப்படவேண்டும்  எனவும், உதவியாளர்கள் 10 ஆண்டு முடித்த நிலையில் மெயின் மைய ஊழியர்களாக பதவி உயர்வு வழங்கிடவும், பதிவி உயர்விற்கான ஊழியர் மற்றும் உதவியாளர் மினி மைய ஊழியர் அனைவருக்கும் பதவி உயர்வு அரசாணை வழங்க வேண்டும் எனவும்,

ஊழியர்களுக்கு 10 ஆண்டுகள் முடித்த உடன் மேற்பார்வையாளர் பதவி உயர்வு, மினி மைய ஊழியர் அனைவருக்கும் 32 வருடம் பணி முடித்த உடனே மெயின் மைய பணியாளராக பதவி உயர்வு, 5 வருடங்கள் பணி முடித்த உதவியாளர் களுக்கு பதவி உயர்வு, அங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

மையத்தில் குழந்தைகளுக்கு தேவையான காய்கறி, மசாலா பொருட்கள் வாங்குவதற்கு முன்பணமாக ரூ.10,000/- வழங்க வேண்டும். மையங்களில் குழந்தைகளுக்காக உணவு சமைப்பதற்கு, குடிக்க வெந்நீர், முட்டை, சுண்டல், பாசிப்பயறு, உருளைக்கிழங்கு, கொழுக்கட்டை ஆகிய அனைத்தும் வேகவைப்பதற்கு சிலிண்டர் பயன்படுகிறது. ரூ.1100 சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது வரை ரூ.405/- மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே சிலிண்டர் வாங்குவதற்கான முழுப்பணமும் தர வேண்டும் என்றும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்குவது போல் எங்களுக்கும் ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு வேண்டும் என்றும், மே மாதம் 1 மாதம் விடுப்பு வழங்கிடவும்,  

செல்போன் சாதனங்களின் பழுதினை சரி செய்யும் செலவினத்தை முழுவதும் அரசு மேற்கொள்ளுதல், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஜிபிஎஃப் தொகை 3 ஆண்டுகள் முடிந்த பின்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், 

உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சங்கத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், மேலும் முதன்மையான மூன்று கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் நிறைவேற்றப்பட வில்லை எனில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் எம்.சரோஜா, பி.சாராதாபாய், டி.டீ.கெஜலட்சுமி, ஆர்.லட்சுமி, எல்.ஜெயக்கொடி, கே.கோவிந்தம்மான், என்.மணிமாலை. கே.மணிமேகலை, மாநில செயலாளர்கள்  ஆர்.சித்ரசெல்வி, டி.சரஸ்வதி, எம்.தனலட்சுமி, எம்.லில்லிபுஷ்பம், வி.தவமணி. வி.அமிர்தவள்ளி, எஸ்.ஹேமப்ரியா உள்பட பலா் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்