இந்நிலையில், வி.ராமசாமியை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் மீது வேண்டுமென்றே அவதூறுகளை பரப்பு வதாகவும் அவருடன் வேலை செய்யும் விற்பனையாளர்களையும், சூப்பர்வை சர்களையும் மிரட்டுவது என அடுக்கடுக்கான புகார்கள் வெளி வந்துள்ளது.
அதில் குறிப்பாக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மதுபானங்களை 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகமாக விற்பதாகவும் இதுப்பற்றிய புகாரின் பேரில் மதுரை மண்டல சிறப்பு பறக்கும் படை அலுவலரின் ஆய்வுக்குழு அதிகாரிகள் வந்து விசாரணை செய்யும் போது இவர் பெயரை குறிப்பிடாமல் இவருடன் பணி செய்யும் வேறொரு விற்பனையாளரின் பெயரை கையெழுத்துயிட்டு அவர்களை விசாரணை வட்டத்துக்குள் சிக்க வைத்து விட்டு இவர் தப்பித்து விடுவதாகவும், யார்? பெயரை குறிப்பிட்டு அவர்களை போல போலியாக கையெழுத்து இடுகிறாரோ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதனால் அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் தன் பணியை செய்ய முடியாமலும், அலுவலகத்திற்கும் விற்பனை செய்யும் கடைக்கும் மாறி, மாறி அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் தவறே செய்யாமல் பழியை சுமந்து வருவதாகவும் வேதனை தெரிவிக் கின்றனர்.
இதேபோல் ஒரு விற்பனையாளரின் ஜாதி பெயரை சொல்லி திட்டுவதும், மிரட்டு வதுமாக இருந்துள்ளார் வி.ராமசாமி. அதனால் மனம் உடைந்த அந்த விற்பனையாளர் தன் உயிருக்கு பயந்து வேலை பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு காணுங்கள் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யப்பட்ட தகவலும் வெளியாகி உள்ளது. இதைப்பற்றி உயர் அதிகாரிகள் விசாரித்தால் அவர்கள் மேல் அவதூறுகளை பரப்புவது, மிரட்டல் விடுவது போன்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இவர் செய்யும் முறைகேடால் பல விற்பனையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் எனவும் கூறுகின்றனர். பணியில் இருக்கும் பிற விற்பனையாளர்களிடம் நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேட்டு நீங்கள் நடக்க வேண்டும் இல்லை என்றால் ஒரேடியாக ஆளை தூக்கி விடுவேன். நான் மதுரை மாவட்ட விற்பனையாளர் சங்கத்தலைவராக இருப்பதாகவும் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும் இருக்கிறேன். அதனால் நான் சொல்வதை தான் மதுரை எஸ்ஆர்எம் மற்றும் உயர் அதிகாரிகள் கேட்பார்கள் என அனைவரையும் மிரட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.
இவர் பல மோசடிகளில் ஈடுபட்டு அது வெளியே யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக அதிகாரிகள் மேல் அவதூறு பரப்புவது, சக விற்பனையாளர்களை மிரட்டுவது, அவர்களைப் போல் போலியாக கையெழுத்துயிட்டு அவர்களை வழக்கில் சிக்க வைப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார் எனவும் கூறுகின்றனர். வி.ராமசாமி மீது ஏன்? இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை, அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்? இவரை யார் இயக்குகிறார்? என அடுக்கடுக்கான கேள்விகள் நம் முன்னே தோன்றுகிறது. ஒரு சாதாரண டாஸ்மார்க் விற்பனையாளருக்கு எப்படி அனை வரையும் மிரட்டும் தைரியம் வந்தது. இது தானாக வந்ததா? அல்லது இந்த தைரியத்தை யாரேனும் கொடுத்து உள்ளார்களா? தனியாக ஒரு அரசாங் கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார் வி.ராமசாமி. இதுபோல் பல்வேறு மோசடிகள் செய்து பல சொத்துக்களை வைத்துள்ளார் எனவும் கூறுகின்றனர். இவர் வேலை செய்யும் போது இவருக்கு என்ன சொத்து மதிப்பு இருந்தது, தற்போது எவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக உதவி மேலாளரை அணுகும் போது வி.ராமசாமி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரித்து வருகிறோம் என தகவல் தெரிவிக் கப்பட்டது. உண்மையாகவே இவர் சங்கத்தலைவராகவும், கொள்கை பரப்புச்செயலாளராகவும் இருக்கிறாரா? இல்லை சங்கத்தின் பேரில் அனை வரையும் மிரட்டுகிறாரா? என ஆய்வு செய்ய வேண்டும்.
அதிகாரிகளையும், விற்பனை யாளர்களையும் தொடர்ந்து இதுபோல் மிரட்டுவது, அச்சுறுத்துவது, அவதூறு பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடும் டாஸ்மார்க் விற்பனையாளர் வி.ராமசாமி மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல தில்லாலங்கடி வேலை செய்யும் இந்த வி.ராமசாமியை தடாலடியாக உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து மற்ற பணியா ளர்களின் வாழ்வை மலரச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...?
0 கருத்துகள்