தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், சிலிண்டிற்கான முழு தொகையை வழங்க வேண்டும் இல்லை என்றால் வருடத்திற்கு நாலு சிலிண்டரை அரசே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மூன்று வருடம் பணி முடிந்த மினி அங்கன்வாடி ஊழியர்களை எந்தவித நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்கிடவும், ஐந்து வருடம் பணி முடிந்த உதவியாளர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், செல்போன் கொடுத்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன் உடனடியாக வழங்க வேண்டும், 1993இல் பணி சேர்ந்தவர் களுக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும், 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், உணவின் செலவுகளை உயர்த்தி வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.இராஜேஸ்வரி தலைமை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் வி.சாந்தி முன்னிலை வைத்தார். மாவட்டச் செயலாளர் அ.வரதலட்சுமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஆர்.தெய்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்