வீரமங்கையின் வரலாற்றைக் காண கூடாத கூட்டம்! ஒரு நடிகருக்கு கூடியது ஏன்?


  எதை நோக்கி செல்கிறார்கள் நம் இளைஞர்கள்... ஒரு திரைப்பட நடிகருக்கு இவ்வளவு காவல்துறையினர்கள் பாதுகாப்பு, இவர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்கள் இதை யெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டின் இளைஞர்கள் செயல்கள் வேதனை அளிக்கிறது. திருச்சியில் நடிகர் விக்ரம் வருகிறார் ஒருபுறம் அவரைப் பார்க்க எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் மறுபுறம் காவல்துறையினர்களின் பாதுகாப்பு மற்றொருபுறம் போக்குவரத்து நெரிசல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடி செய் கின்றனர். அதிலும் ஒரு காவலர் ஒருவரை எட்டி, எட்டி மிதிக்கிறார். இதேபோல் மதுரையில் கல்லூரிக்கு வந்த நடிகர் விக்ரமை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டம் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு அதிலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் மயக்க நிலை அடைந்து அவசர அவசரமாக ஆட்டோவில் மருத்துவ மனைக்கு அனுப்புகின்றனர். 

அந்த வழியாக செல்லும்போது வயதானவர் நம்மிடம் கூறிய வார்த்தை ஒரு நடிகனுக்கு இவ்வளவு கூட்டம், இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு இது எல்லாம் முட்டாள்தனமாக தோன்ற வில்லையா? என கேள்வியை நம்மிடம் எழுப்பினார். மற்றொருவர் மக்களின் பல்வேறு பிரச்சினைக்காக அதை முன்னெடுத்து போராட்டமோ, அல்லது ஆர்ப் பாட்டமோ செய்ய காவல் துறையினரிடம் அனுமதி கேட்டால் மறுக்கப்படுகிறது. மக்களுக்காக தான் கேட்கிறோம், மக்கள் நலனுக்காக கேட்கிறோம், மக்களின் உரிமைக்காக கேட்கிறோம் என்றெல்லாம் கூறிய பின்பும் அனுமதி கிடையாது என்று கூறுகிறார்கள். ஆனால் மதுரையில் முக்கிய இடங்களில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் இருக்கும் அதை கடந்து செல்வதற்குள் மக்கள் படாத பாடு படுகின்றனர். 

இந்நிலையில், இது போல் ஒரு நடிகருக்கு அனுமதி கொடுத்து, அதற்கு காவல் துறையினர் பாதுகாப்பும் கொடுத்து, பொதுமக்களுக்கு மட்டுமின்றி  இளை ஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது நியாயமா? கூட்ட நெரிசலில் ஒரு மாணவர் மயங்கி விழுந்து உள்ளார் அவருக்கு ஏதும் ஆகக் கூடாது இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ஆனால் ஏதோ ஒன்று ஆகிவிட்டால் இதற்கு அந்த நடிகர் பொறுப்பு ஏற்றுக் கொள்வாரா? அல்லது கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா? இல்லை அனுமதி தந்த காவல் துறையினர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார்.  நீங்கள் ஒரு செய்தியாளர் என்று நான் நினைக்கிறேன் இதையெல்லாம் நீங்கள் செய்தியாக வெளியிடமாட்டீர்களா இந்த அவலத்தை எடுத்துக் கூற மாட்டீர்களா எனவும் நம்மிடம் கூறினார். நூற்றுக்கு நூறு உண்மைதான். 

நடிகர் விக்ரம் தன் கடின உழைப்பால் முன்னேறி வந்தவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் நம் மதுரையில் வீரமங்கை வேலு நாச்சியாரை பற்றி இசையார்ந்த நாட்டிய நாடகம் பிரம் மாண்டமாக நடைபெற்று கொண் டிருக்கும் வேளையில் அங்கு வயது முதிர்ந்தோர்கள் வந்தனர் பெரியளவில் இளைஞர்கள் காணப் பட்டதாக தெரிய வில்லை. ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலு நாச்சியார் இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி இப்படிப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை பற்றிய இன்றைய இளைய தலைமுறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை நம் முன்னோர்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு எண்ணற்ற சுதந்திர தியாகிகளையும், வீரர்களையும், வீர மங்கையர்களையும் பற்றிய  வரலாற்றை எடுத்து கூறுவதற்கு நேரமும் இல்லை அப்படியே கூறினாலும் அதை கேட்பதற்கு அவர்களும் தயாரா கவும் இல்லை. 

இப்படி இருக்கும் சூழ்நிலையில் நம் வீரமங்கை வேலு நாச்சியாரை பற்றிய முழுமையாக தெரிந்து அறிந்து கொள்ள மிகப்பெரிய ஒரு வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அதுவும் நம் மதுரையில் பல்வேறு பெருமைகளும், வரலாற்று சிறப்புமிக்க கதைகளும் இருந்தாலும் மதுரையில் வேலு நாச்சியாரை பற்றிய அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வரும் இந்நாளில் அதைப் பார்த்து இளைஞர்கள் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் ஒரு நடிகர் வருகிறார் என்பதற்காக இப்படி அலைமோதி கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் காவல்துறையினர்கள் தடியடி செய்வது,  எட்டி உதைப்பது, மதுரையில் மயக்க நிலை அடைந்து மருத்துவமனைக்கு ஓடுவது என்பது வெட்கக்கேடாக உள்ளது. 

வீரமங்கை வேலு நாச்சியாரின்  சிறப்புமிக்க வரலாற்றை அனைவருக்கும் எடுத்தும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இது போல் ஒரு நடிகருக்கு அதே நாளில் அனுமதி கொடுத்தது ஏன்? அதிலும் குறிப்பாக மாணவர் களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய கல்வி கூடங்களில்  ஒரு நடிகரை வரவேற்பது என்பது சரியா? கல்வி சார்ந்து அவர் பேச வரவில்லை அவருடைய திரைப்படம் சார்ந்து வருகிறார் திரைப்படம் சார்ந்து ஒரு நடிகர் வரும்போது கல்விக்கூடங்களில் அனுமதி கொடுப்பது ஏன்? 

மதுரையில் கோப்ரா திரைப்பட விழா கல்லூரி மைதான அரங்கத்தில் 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என செய்திகளை பார்க்கும்போது ஒரு நடிகருக்கு ஆயிர கணக்கில் மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் கூடும் போது நம் நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற போராட்டங்களையும், வலிகளையும் தாண்டி நாட்டின் விடுதலைக் காக போரிட்ட அந்த வீரமங்கையின் வரலாற்றைக் காண கூடாத கூட்டம் ஒரு நடிகருக்கு கூடி இருப்பதை காணும் போது பெரும் வெட்கக்கேடாக உள்ளது. நடிகர் வந்ததால் திரைப்படத்தில் வந்த வசனத்தையே கூறத் தோன்றுகிறது இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று ஒரு திரைப்படத்தில் வசனம் தோன்றும் இந்த அவல நிலை தொடர்ந்தால் அந்த திரைப்படத்தில் வந்த வசனம் போல் அமையக்கூடும்.....

மதுரை மலர் ஆசிரியர் மு.கணேஷ்



கருத்துரையிடுக

0 கருத்துகள்