திறந்தவெளி கழிப்பறையாக மாறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எண்ணற்ற பொதுமக்கள் தன் கோரிக்கையை மனுவாக அளிப்பதற்கு நாள்தோறும் வருகின்றனர். அதேபோல் முதலமைச்சர் காப்பீடு திட்டம், ரேஷன் கார்டு கருவுலகம் இன்னும் பல தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் அலுவலகங் களுக்கு நாள்தோறும் மக்கள் வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் கூட்ட அரங்கம் அருகில் பொது கழிப்பறைகள் உள்ளது திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாளில் வரும் பொதுமக்கள் அதை பயன் படுத்துகின்றனர். 

ஆனால் இதர தேவைக்காக வரும் பொதுமக்கள் பொது கழிப்பறைகள் இல்லாமல் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் ஆண் பெண் என எண்ணற்ற காவல் துறையினார்கள் பணி செய்கின்றனர் ஒவ்வொரு முறையும் நுழைவாயில் அருகில் இருந்து ஆட்சியர் அலுவலகத் துக்குள் செயல்படும் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

முதலமைச்சர் காப்பீடு திட்டத்திற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் அங்கிருந்து எப்படி உள்ளே செயல்படும்  கழிப்பறை களுக்கு வர முடியும் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை வந்து செல்லும்  மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் பொது கழிப்பறைகள் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் வளாகமே திறந்தவெளி கழிப்பறையாக மாறியுள்ளது. இதனால்  மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பொதுமக்கள் மற்றும் ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் அரசு அலுவலகங் களில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திறந்த வெளியில் தான் செல்கின்றனர் அதனால் பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எண்ணற்ற பொதுமக்கள் வந்து செல்லும் ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்காக  பொது கழிப்பறைகள் இல்லாதது வேதனை அளிக்கின்றது.  

நூலகம் செயல்படும் இடத்திற்கு அருகில் ஒரு மரத்தில் கழிப்பறை செல்லும் வழி என பதாகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது அதை பார்க்கும் பொதுமக்கள் கழிப்பறையை தேடி அலைகின்றனர் அதை நம்மால் பார்க்க முடிகிறது. கழிப்பறை செல்லும் வழி என்று போடு உள்ளது கழிப்பறை எங்கே என தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.  நூலகத்திற்கு அருகே கழிப்பறை கட்டிடம் ஒன்று உள்ளது ஆனால் அது பூட்டப்பட்டு செயல்படாமல்  உள்ளது.   எண்ணற்ற  பெண் காவலர்களும், புகார் அளிப்பதற்காக அல்லது காப்பீடு திட்டம், ரேஷன் அட்டைக்காக வரும் பெண்கள் கழிப்பறைகள் இல்லாமல் திறந்த வெளியில் அவர்களால் எப்படிச் செல்ல முடியும்? 

இவ்வளவு அரசு அதிகாரிகள் இருந்தும்  கழிப்பறைகள் செயல்படுத்த ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியும் எழுப்ப தோன்றுகிறது ஆகவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் கருத்தில் கொண்டு உடனடியாக கழிப்பறைகள்  ஆட்சியர் வளாகத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.....


கருத்துரையிடுக

0 கருத்துகள்