மதுரை மாவட்டத்தில் ஒரு சில செய்தியாளர்கள் என்று கூறிக்கொண்டு செய்தி சேகரிக்கும் இடத்தில் தகராறு செய்வதும், அடாவடிகளில் ஈடுபடுவதும், மது போதையில் வருவது என தொடர்கதையாகவே உள்ளது. அதனால் பிற செய்தியாளர்களுக்கு மன உளைச்சலும், செய்தி சேகரிப்பதற்கு தடையும் ஏற்படுகிறது. இதில் ஒரு சில செய்தியாளர்கள் ஏன்? இது போல் அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என கேட்டால் அவர்களை அடிக்க வருவது, தவறான வார்த்தைகளை உபயோகப் படுத்துவது என முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலர் எந்த பத்திரிகையில் செய்தியாளராக வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை, பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்ட பின்பும் செய்தியாளர் என்று கூறிக் கொண்டு செய்தி சேகரிக்க வருகின்றனர். இவர்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குள்ளேயே மது போதையில் வந்து அமர்ந்து கொள்வது, பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொது மக்களிடம் செய்தி சேகரிக்கிறேன் என்ற போர்வையில் மதுபோதை யிலேயே வந்து நிற்பதும், அவர்களிடம் பேசுவதும், இதனால் அங்கு வருபவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். மேலும் ஒரு சிலர், செய்தியாளர் என்ற போர்வையில் இவர்கள் செய்வது ஒட்டுமொத்த செய்தியாளர் களுக்கும் அவப்பெயர் உண்டாகிறது.
செய்தியாளர் என கூறிக்கொள்ளும் ஒரு சிலர் முதலில் ஒரு செய்தியை எப்படி எழுதுவது என்று கூட தெரியாது என்ன போராட்டம் நடந்தது, என்ன கோரிக்கை வைத்தார்கள், என்ன நிகழ்வுகள் நடந்துள்ளது என்று கூட தெரியாமல் நானும் செய்தியாளர் என்று கூறிக் கொண்டு வருவது பெரும் கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு சில பத்திரிகை ஆசிரியர்கள் பத்திரிக்கை துறைக்கு சம்பந்தமில்லாமல் ஒருவரை செய்தியாளராக சேர்த்துக் கொள்வது அவருக்கு அங்கீகாரம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் இது போல் அரைவேக்காடு எங்கும் உலாவுவதை தவிர்க்க முடியும். பேச்சில் ஒரு கண்ணியம் இல்லாமல் ஆபாசமாக பேசுவது, அடாவடியில் ஈடுபடுவது இவர்களை வேரோடு களை எடுக்க வேண்டும் அப்போதுதான் செய்தியாளர் களுக்கும், பத்திரிகைதுறைக்கும் விடிவுகாலம் பிறக்கும். இந்த நிகழ்வுகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மற்ற செய்தியாளர்கள் தன் பணியையே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மதுரை மாவட்டத்தில் இதுபோல் அடாவடியில் ஈடுபட்டவர்கள் மீது ஆங்காங்கே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர்கள் திணறுகின்றனர். அவர்களை கேட்டால் நாங்கள் செய்தியாளர்கள் எனக் கூறுவதால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உருவாகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவரும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதுபோல் அடாவடியில் ஈடுபடும் மோசடி பேர்வழிகளை கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியும் ஆனால் தயக்கம் காட்டுவது ஏன்? மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லையா?
இது காலம் காலமாக நடைபெற்று வருகிறது ஒரு பத்திரிகை நிர்வாகம் நினைத்தால் தான் ஒருவர் செய்தியாளர், இல்லையென்றால் அவருக்கு அந்த அங்கீகாரம் கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோல் ஒழுங்கீனமாக நடக்கும் செய்தி யாளர்கள் என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகளை ஏன்? சில பத்திரிகை அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யாமல் உள்ளது. இதுபோல் அடா வடியில் ஈடுபடும் நிகழ்வுகள் அவர்களுக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொள்கிறார்களா? இதற்கு ஒரு சில சங்கங்கள் ஆதரவு தருகிறதா? என கேள்வி மேல் கேள்வி எழுப்ப தோன்றுகிறது.
செய்தியாளர்கள் என்ற போர்வையில் உலாவும் மோசடி கும்பலை பற்றி பிற செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலோ அல்லது செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கூறினாலோ புகார் அளித்த செய்தியா ளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது, அச்சுறுத்துவது போன்ற செயல் களை இந்த அடாவடி கும்பல் செய்து வருகிறது. போலி நிருபர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
மே30,2012 கோவை: செய்தியாளர் என்ற பெயரை பயன்படுத்தும் போலி நிருபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் போலியான நிருபர்கள் நடமாடுவதாகவும், போலியான இதழ்கள் நடத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. வாகனங்களில் பிரஸ் என்று ஸ்டிக்கரை பயன்படுத்திக் கொண்டு செய்தி அல்லாத பணிகளில் ஈடுபடும் வாகனங்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ‘பத்திரிகையாளர்’ என்ற போர் வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக் கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை ஜனவரி 10, 2020, சென்னை: தமிழ்நாட்டில் ‘பத்திரி கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக் கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித் ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசார ணைக்கு வந்தபோது:
பத்திரிகையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்சள் பத்திரிகை நடத்து பவர்களும் தங்களை பத்திரிகையாளர் என கூறிக்கொள்வது வருத்தத் துக்குரியது என தெரிவித்தனர். பத்திரிகைதுறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பத்திரிகை சங்கங்கள் போலி நிருபர்களை நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுபோன்ற போலி பத்திரிகையா ளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிகையாளர்கள் பாதிக்கப் படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப் பதில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், உண்மையான பத்திரிகையா ளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகை யாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன, அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒருவர் குற்ற பின்னணியில் இருந்தால் அவருடைய பதவி பறிக்கப்படுகிறது அதேபோல் அதிகாரிகள் குற்றம் செய்ததை நிரூபிக்கும் பட்சத்தில் அரசுதுறையாக இருந்தாலும், தனியார் துறையாக இருந்தாலும் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு காவல் துறையினரின் விசாரணையின் வட்டத் துக்குள் வருகிறார். ஆனால் செய்தியாளர் என்ற போர்வையில் உலாவும் இது போல் மோசடி கும்பல் களுக்கு மட்டும் விதிவிலக்கா அல்லது என்ன தவறு செய்தாலும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது ஏனென்றால் இவர்கள் செய்தியாளர்கள் என்று அரசு ஏதும் சிறப்பு சலுகையும், விதிவிலக்கும் அளித் துள்ளதா என தெரியவில்லை.
இது சம்பந்தமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடமும், மதுரை மாநகர் காவல் ஆணையரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது இதன் பெயரில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்......?
0 கருத்துகள்