மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழு சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் 11 வயது சிறுமிக்கு மூளை தண்டு வட சந்திப்பு பகுதியில் இருந்த கட்டியை ஹானா ஜோசப் மருத்துவமனையின் நிர்வாகியும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் எம்.ஜே.அருண்குமார் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு 15 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து ஹானா ஜோசப் மருத்துவ மனையின் நிர்வாகியும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர். எம்.ஜே. அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது : 11 வயது சிறுமி சிகிச்சைக்காக எங்கள் மருத்துவ மனைக்கு வந்தார். அவளுக்கு கடந்த 3 மாதங்களாக வலது கையால் எழுதுவது பிற வேலைகளை செய்வது எழுந்து நடக்கும் போது அடிக்கடி கீழே விழுவது போன்ற பல பிரச்சனைகள் இருந்தது . அவருடைய உடல் சார்ந்த பிரச்சனைகள் எங்கள் மருத்துவ மனைக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பாக மிகத் தீவிரமடைந் ததோடு கழுத்துப் பகுதியில் அதிக வலி ஏற்பட்டு அவதிப்பட்டிருந்தார் .
இதனை தொடர்ந்து எம்ஆர்ஐ ஸ்கேன் உடன் சிடி ஆஞ்சியோகிராபி செய்து பார்த்தபோது ஸ்வானானோமா எனப்படும் பெரியகட்டி தண்டு வடத்தின் முன் பகுதியில் வளர்ந்து, மூளைத்தண்டு மற்றும் கழுத்து தண்டுவடத்தை வலது மற்றும் இடது பக்கமாக அழுத்தி கொணடிருந்தது தெரியவந்தது. மூளை தண்டுவட சந்திப்பில் அல்லது க்ரேணியோ வெர்டிபெரல் ஜங்சன் எனப்படும் இடத்தில் இருந்து உருவாகும் பெரிய கட்டிகள் மிகவும் சிக்கலான வைகள் இவற்றை அகற்றுவது மிகவும் சிரமமானதாகும் .
இவை தண்டுவடத்தின் ஒரு பகுதியை மட்டுமே அழுத்தத்தை ஏற்படுத்தும். இது ஆரம்பநிலையில் கண்டறியப்படும் போது இதை அறுவைச்சிகிச்சை செய்து அகற்றுவது எளிது ஆனால் இந்த சிறுமிக்கு மூளைத்தண்டு மற்றும் கழுத்து தண்டுவடப் பகுதியின் இரு பக்கங் களிலும் கட்டி வளர்ந்திருந்தது இந்தப் பகுதிதான் பேசுவது, உணவு விழுங்குவது போன்றவற்றையும் இயக்குவதாகும் கட்டியின் அளவு பெரியதாக இருந்ததால் இந்த வேலைகளை செய்யும் மூளை பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, மூளையின் பின்பகுதி மற்றும் மூளைத் தண்டுவட பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது.

11 வயதான பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் எடை 23 கிலோ மட்டுமே இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுப்பது கூட மருத்துவக் குழுவிற்கு சவாலாக இருந்தது. குழந்தை பருவத்தில் இந்த விதமான சிக்கலான கட்டிகள் உருவாவது உலக வரலாற்றில் புதுமையான ஒன்றே. பொதுவாக இத்தகைய கட்டிகள் நடுத்தர வயதினருக்கும், வயதானவர் களுக்கும் மட்டுமே ஏற்படக் கூடியதாகும்.
இந்த சிக்கலான தொடர் அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவ மனையில் தலைமை நரம்பியல் துறையின் இயக்குனர் எம்.ஜே. அருண்குமார் தலைமையில் டாக்டர்.ஆர். வீரபாண்டியன், டாக்டர்.கே. செந்தில் குமார் மற்றும் டாக்டர்.அ.கணேஷ் ஆகிய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள். என்.அருண்குமார் மற்றும் பி.ரமாசங்கரி, நரம்பியல் மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்.நவீன் கார்த்திக் மயக்கமருந்து நிபுணர் மற்றும் டாக்டர். எம்.கமல ரத்தினம் கதிரியக்க நிபுணர் மற்றும் அல்ட்ரா சோனாலஜிஸ்ட் உள்ளிட்ட மருத்துவர்கள், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் ஊழியர்கள் ஆகியோரது ஒத்துழைப்பால் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது என தெரிவித்தார்.
0 கருத்துகள்