மதுரை சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் நிர்மலா அரசு உதவி பெறும் பள்ளி,சேதுபதி அரசு உதவி பெறும் பள்ளி என மூன்று பள்ளிகளை சேர்ந்த 18 மாணவிகள் 1 மாணவன் உட்பட 19 பேர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு யுனிவர்சிட்டியில் நடைபெற்ற YSPA INDIA 3rd சாம்பியன்ஷிப் 2023 என்ற தேசிய அளவிலான போட்டிகளில் மதுரையை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் பளு தூக்கும் போட்டி, ஓட்டப்போட்டி, யோகா, சிலம்பம், கேரம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று 9 தங்கப்பதக்கமும் 5 வெள்ளி பதக்கங்களும் பெற்று சாதனை புரிந்த மாணவ மாணவிகள் இன்று மதுரை ரயில் நிலையத்திற்கு வெற்றி பெற்றதற்கான கோப்பை, பதக்கங்கள், சான்றிதழோடு நேற்று மதுரை ரயில் நிலையம் வந்தனர்.
மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர். முடிவில் பெண் பயிற்சியாளர் காஞ்சனா அவர்களுக்கு மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்....
0 கருத்துகள்