தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றிப்பெற்றனர்


    

  மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைப்பெற்ற கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கொடைக்கானல் செண்பகனூரில் 10ஆம் ஆண்டிற்கான தேசிய அளவில் கராத்தே போட்டி மே 10-ம் தேதி  இந்திய அமைப்பின் தலைமை பயிற்சியாளரும் மதுரை  NIHON GOJU RYU KARATE DO INDIA நிறுவனருமான சீகான்.பி.ஆர்.நாகசந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. 

 இப்போட்டியில், சென்செய். பிருந்தாதுரையின் மாணவர்கள் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றிப் பெற்றனர். இதில் ச.தனலட்சுமி (மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி),  ஏஞ்சலின் (அரசு மேல்நிலைப்பள்ளி, பரவை),  பி.அஸ்வின்மூர்த்தி (செவன்த்டே பள்ளி), சோ.துருவதேவ் (புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி), ஞா.ஜான்சன் (புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி), வே.ஹாசினி (புனித வளவனார் மேல்நிலைப்பள்ளி, கூடல் நகர்), ரா.லிஷாந்த் வேதி வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

 பிரகதீஷ்ராஜ் (பொதும்பு அரசு மேல்நிலைப்பள்ளி), ஞா.தெபோராள் (புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடல் நகர்) ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர்.

 பி.அஜய் (செவன்த்டே பள்ளி), வே.ஆகாஷ் (புனித வளவனார் மேல்நிலைப்பள்ளி, கூடல் நகர்) ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். 

  போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயமும் வழங்கி பாராட்டினர். போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் சீகான்.பி.ஆர்.நாகசந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர்கள், மற்றும் ஸ்ரீ உதயா ஆட்டோ கேரேஜ் உரிமையாளர் துரைப்பாண்டி ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்