மதுரை ஒத்தக்கடை பொதுமக்கள் பெரும் அச்சம்! ஒரே மாதத்திற்குள் 5 பைக்குகள் அடுத்தடுத்து திருட்டு

 

பெருநகரங்களில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக ஒரு இருசக்கர வாகனம் இருக்கும் அளவுக்கு மக்களின் தேவையும் அதிகரிக்கத் தொடங் கியுள்ளது.

மதுரை புறநகரில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் வாகன நெரிசல் மிகுந்து காணப் படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் மதுரையில் இருசக்கர வாகன திருட்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

மதுரை ஒத்தக்கடை பகுதியில் இரு சக்கர வாகனம் தொடர்ந்து திருடப்பட்டு வருவது வாடிக்கையாகி போனது. சமீப காலத்தில் 5 இருசக்கர வாகனங்கள் திருடப் பட்டுள்ளது. யானைமலை ஒத்தக்கடை பாரதி நகரில் சேதுபதி (எ) பிரபு என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த ராயல் என்பீல்ட் புல்லட், நாஞ்சில் நகரில் கோபி என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யமஹா R15, பாண்டியன் நகரில் கோகுல் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் புல்லட், தேவர் மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆனந்த் கண்ணன் என்பவரின் ஹீரோ ஸ்பிலண்டர் பிளஸ், சுதந்திர நகர் 3-வது தெருவில் வசிக்கும் அஜய் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த R15 ஆகிய இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர் ஆனால் இதுவரை ஒருவரை கூட பிடிக்க முடிய வில்லை சிசிடிவி ஆதாரம் இருந்தும் காவல்துறையினர்கள் கண்டு பிடிக்காதது வியப்பாக உள்ளது இதனால் ஒத்தக்கடை பகுதி வாழ் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். காலையில் எழுந்தவுடன் கண் விழிப்பதே இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் என கூறுகின்றனர். 

தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதால் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் நாலொரு மேனி பொழுதொரு வண்ணம் என்பது போல் திருடர்கள் சர்வ சாதாரணமாக இரு சக்கர வாகனங்களை குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று தொடர்ந்து திருடி செல்கின்றனர். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான உத்தரவு பிறப்பித்து ஒத்தக் கடையில் நடக்கும் தொடர் இருசக்கர வாகன திருட்டை தடுத்து நிறுத்தி பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்