மதுரையில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் அறக்கட்டளை நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான 11-ஆம் ஆண்டு மாபெரும் சுயம்வரம்
சென்னை கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதுரை மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மகளிர் நல்வாழ்வுரிமை சங்கம், அனைத்து அரசு பணி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், அறக்கட்டளைகள், விளையாட்டுச்சங்கம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் சுயம்வரம் நிகழ்ச்சி மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வருகின்ற 26.06.2022 அன்று நடைெபற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500பேர் கலந்து கொள்ள உள்ளதாக, மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவரும் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவருமான பூபதி தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பூபதி பேசியதாவது: தமிழகத் திலுள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளரை, மாற்றுத் திறனாளர் அல்லாதோர், மாற்றுத்திறன் தொழிலதிபர், அரசு ஊழியர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறன் அல்லாதோர் மற்றும் மாற்றுத்திறனாளி விவாகரத்து பெற்றோர், திருமணம் செய்ய சுயவரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் முனைவா். பி.சிம்மச்சந்திரன் மற்றும் மாநில நிா்வாகிகளின் தலைமையில் மாற்றுத்திறனாளி களுக்கு மாபெரும் சுயம்வரம் நிகழ்ச்சி மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வருகின்ற 26.06.2022 அன்று சுயம்வரம் நிகழ்ச்சி நடைெபற உள்ளது.
இச்சுயம்வரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு சென்னையில் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று இந்து முறைப்படி மட்டுமே மணம்முடித்து வைக்கப்படுகிறார்கள். மணமக்களுக்கு 51 சீர் வரிசைகள் பொருட்கள், 2 கிராம் தங்கத்தாலி, துணிமணிகள், 2 மாத மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும் அரசு பதிவுத் திருமண சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாவட்ட வாரியாக அரசு வழங்கி வரும் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 பட்டதாரிக்கு ரூ.50,000 பெற வழி காட்டப்படுகிறது. இச்சேவை அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது. மணமகனுக்கு 45 வயதும் மணமகளுக்கு 40 வயதும், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். 8-ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சியில் மதுரையில் 103 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஆர்.மோகனப்பிரியா, ஆர்.சபீனா, க.முத்துமகேஸ்வரன் பி.பிரபாகரன், எஸ்.குருநாதன், ஏ.சந்திரசேகர், ஏ.சேகர், எம்.காமாட்சி, ஜே.ரஞ்சித்குமார், முனைவர்.ஐ.அக்கீபா, எஸ்.விக்னேஷ், எஸ்.ஹேமலதா, முனைவர். எஸ்.அனந்தச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்