இந்தியாவின் முன்னணி நோட்புக் மற்றும் எழுது பொருள் தயாரிப்பு பிராண்ட்களில் ஒன்றான ஐடிசி நிறுவனத்தின் கிளாஸ்மேட், மாணவர்களின் புத்தி கூர்மையை ஊக்குவிக்கும் வகையில் 'எடுகேம்ஸ் இன்பினிட்டி' என்னும் புதிர் போட்டியை கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் இணைந்து நடத்த உள்ளது. கல்வியை ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிர் போட்டியை கிளாஸ்மேட் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஹாங்காங் டிஸ்னிலேண்டை சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள்.
இந்த போட்டியின் முக்கிய நோக்கம், கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மேலும் மாணவர்கள் தங்கள் கல்வியை வேடிக்கையான முறையில் கற்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில், தலைமுறை தலைமுறையாக மாணவர் களால் மிகவும் விரும்பப்படும் கிளாஸ்மேட் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தில் 'எடுகேம்ஸ் இன்பினிட்டி' புதிர் போட்டி இடம்பெறும். மாணவர்கள் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தை ஸ்கேன் செய்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விளையாட்டை விளையாடலாம்.
இந்த போட்டி குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 30 நகரங்களில் கிளாஸ்மேட் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் ஒரு கிளாஸ்மேட் நோட்புக்கை வாங்கி இந்த புதிர் போட்டியில் மாணவர்களை பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளது. இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களுமான இரட்டையர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் 30 நாட்களும் இந்த புதிர் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’என்பது வெறும் விளையாட்டை மட்டும் பற்றியது அல்ல இது உங்கள் மனதைப் பயிற்று விப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய புதிருக்கு நாடு முழுவதும் 30 நகரங்களில் உள்ள மாணவர்கள் எவ்வாறு விடை காண் கிறார்கள் என்பதைப் பார்ப்பதில் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
வைஷாலி கூறுகையில், நாங்கள் எங்கள் வீட்டில் பல்வேறு புதிர் போட்டிகளை விளையாடி உள்ளோம். அவை எங்களை மிகவும் புத்திகூர்மையாக்கி உள்ளன. இன்றைய தலைமுறையினருக்கு கற்றலை மகிழ்ச்சியானதாக மாற்றும் நடவடிக் கையில் இறங்கி உள்ள கிளாஸ்மேட்டை பார்க் கையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த முயற்சி குறித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய அவர்களின் பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தைகள் இளமையாக இருந்தபோது, அவர்களை தினமும் புதிர்கள் மற்றும் மூளைக்கு பயிற்சி தரும் விளை யாட்டுகளை விளையாட ஊக்குவித்தோம். இந்த சிறிய பழக்கம் அவர்களின் மன ஒழுக்கத்தை எவ்வாறு வளர்க்க உதவியது என்பதை நாங்கள் நேரில் கண்டுள் ளோம். கிளாஸ்மேட் துவக்கியுள்ள இந்த முயற்சி எங்களுக்கு அதை நினை வூட்டுகிறது. மேலும் இது மற்ற குழந்தைகள் தங்கள் பயணத்தைத் துவங்குவதற்கான ஒரு அற்புதமான வழியாகும்.
இது குறித்து ஐடிசி நிறுவனத்தின் கல்வி மற்றும் எழுதுபொருள் தயாரிப்புகள் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி விகாஸ் குப்தா கூறுகையில், கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் வேடிக் கையான முயற்சி ஆகியவற்றின் உணர்வு அந்த நம்பிக்கையை உயிர்ப்பிக்க வேண்டும் என்றும் நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அதற்கு சரியான முன் மாதிரியாக பிரக்ஞானந்தாவும் வைஷாலியும் உள்ளனர். அவர்களின் வெற்றியும் சாதனைகளும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்பு கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு தினமும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் பரிசாக வழங்கப்படுவதோடு, முதலிடம் பிடிப்பவர்கள் டிஸ்னிலேண்டிற்கும் அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள். இந்தப் போட்டியானது அசாமில் குவஹாத்தி, கர்னாடகாவில் பெங்களூர், ஹூப்ளி, மங்களூர், மைசூர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்பட கேரளா, ஆந்திரா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்கள் என 30 நகரங்களில் நடைபெற உள்ளது.
0 கருத்துகள்