மூளை ரத்தக்குழாய் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நரம்பியல் எண்டோவாஸ்குலர் இன்டர்வென்ஷனல் குறித்த கருத்தரங்கு மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று தொடங்கியது

 


    மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நியூரோ எண்டோ வாஸ்குலர் இன்டர்வென்ஷன் கான்கிளேவ் என்ற கருத்தரங்கை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்துகிறது. இதுகுறித்து மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் கவுதம் குஞ்சா, செல்வமுத்துகுமரன், முருகந்தராஜன், செந்தில்குமார் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்தமிழ்நாட்டில் முதலாவது பைப்ளேன் கேத் லேப் குறித்து இன்று முதல் 20-ந்தேதி வரை கான்கிளேவ் கருத்தரங்கை நடத்துகிறது. இதில் வடமாநில டாக்டர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட நரம்பியல் டாக்டர்கள் பங்கேற்கிறார்கள். மூளையில் உள்ள நரம்புக்குழாய் பாதிப்புகளைக் கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் இந்த கேத்லேப் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சிக்கலான துல்லியமான இந்த அறுவை சிகிச்சைக்கான நவீன பைப்ளேன் கேத்லேப் கருவி மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் தற்போது 3 சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்துள்ளோம். மேலும் இதனை மற்ற டாக்டர்கள் அறியும் வண்ணம் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதில், டாக்டர்கள் பயிற்சிபெறும் வண்ணம் மூளை ரத்தநாளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கேத்லேப் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் முறையை நேரடியாக காண்பிக்கிறோம். மேலும் டாக்டர்கள் பயிற்சி பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். தென் தமிழகத்தில் நரம்புக்குழாய் பாதிப்புகளை கண்டறியும், சிகிச்சை யளிக்கும் பைப்ளேன் கேத்லேப் கருத்தரங்கு மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தான் நடத்தப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையையும் அதன் பலன்களையும் வழங்குவது எங்களது இலக்காகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்