தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்; மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வே.ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை...

 

மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வே.ராமச்சந்திரன் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். 

மனுவில், மதுரை நகராட்சியாக இருந்த 1950களில் அப் போதைய நகராட்சி நிர்வாகம் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு மேளவாசல், சுப்பிரமணியபுரம், எஸ்.எம்.பி. காலனி, ஆரப்பாளையம், பூங்கா நகர், மஞ்சள் மேடு, மூலக்கரை, சிம்மக்கல், கரும்பாலை, ஓபுளாபடித்துறை (கக்கன் காலனி) உள்ளிட்ட குடியிருப்புகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப் புகள் கட்டப்பட்டு வழங்கியது. மூன்று தலைமுறைகளாக தூய்மைப் பணியா ளர்கள் அங்கு வசித்து வருகின்றனர். இதில் மேளவாசல், சுப்பிர மணியபுரம், எஸ்.எம்.பி. காலனி, ஆரப்பாளையம், பூங்கா நகர், மஞ்சள் மேடு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டி சொந்தமாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதே போன்று கரும்பாலை, சிம்மக்கல், ஓபுளாபடித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பையும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக வீடுகள் கட்டி வழங்க தொடர்ச்சியாக மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி களும் மதுரை மாநகராட்சிக்கு நில ஒப்படைப்பு செய்யக்கோரி கடிதமும் வழங்கியுள்ளனர். 

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே இது சம்பந்தமாக கடந்த 2022ம் வருடம் மே மாதம்  முதலமைச்சருக்கு தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வழங்க ஆவணம் செய்ய கடிதத்தின் மூலமாக சமூக ஆர்வலர் வே.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. 

எனவே மாநகராட்சி ஆணையாளர் தூய்மை பணியாளர்களின் நலன்கருதி நடைபெற விருக்கும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தூய்மை பணியாளர் களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டி சொந்தமாக வழங்க மனுவில் குறிப்பிட்டுள்ள கரும் பாலை சிம்மக்கல் பகுதிகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திற்கு நில ஒப்படைப்பு செய்ய வேண்டு மென சமூக ஆர்வலரான வே.ராமச்சந்திரன் தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட் டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்