மதுரை, ஜூலை 09; மதுரை எஸ்.எஸ்காலனி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் முதல் நிலை காவலர் ஜெகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களையும் அவர்கள் வைத்திருந்த திருடப்பட்ட இரண்டு செல் போன்களையும் கைப்பற்றி காவல் நிலையத்திடம் ஒப்படைத்தார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளிகளாவர் என்பது குறிப்பிடதக்கது. பணியில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து உரியவர்களிடம் பொருளை ஒப்படைக்க உறுதுணையாக இருந்த காவலரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை கூறியது மட்டுமில்லாமல் பணி சிறக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.
0 கருத்துகள்