தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் நடத்திய தேசிய பத்திரிகையாளர் தின விழா

திருச்சி: நவம்பர் 18: திருச்சியில் தேசிய பத்திரிகையாளர் தினவிழா நவம்பர் 16-ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சரவணன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கினார். அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன், ராக்போர்ட் டைம்ஸ் ஆசிரியர் எஸ்.ஆர். லெக்ஷ்மிநாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை கௌரவித்து வாழ்த்துரை வழங்கினார்கள். 

திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழா சிறக்க வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார். செய்தித்துறை அமைச்சரின் வாழ்த்து கடிதம் விழாவில் வாசிக்கப்பட்டது. பத்திரிகையாளர் நலன் சார்ந்த 10 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விழாவை பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், வெற்றியுகம் ஆசிரியர் காமேஷ்கண்ணன்,  ஜனமுரசு ஆசிரியர் முகமதுகனி, வல்லூறு ஆசிரியர் மோகன்ராம், அரசியல் சகாப்தம் ஆசிரியர் அறிவழகன், லட்சியம் வெல்லும் ஆசிரியர் சதாசிவம், ஜனமுரசு தமிழரசன், அரசியல் அங்கதம் ஆசிரியர் நவீன்மணி, சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்மராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், சட்ட களஞ்சியம ஆசிரியர் கலைமணி, விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், ஆரம்பம் ஆசிரியர் ராமசந்திரன்,  மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், மாலை தீபம் ஆசிரியர் முகுந்தன், நமது ராஜ்ஜியம் ஆசிரியர் சக்திவேல், ஆனந்த், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சிறப்பாக விழாவை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் தமிழகம் முழுவதிலும் இருந்த வருகை தந்த பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மாநிலத்தலைவர் எஸ்.சரவணன் நன்றி கூறினார்.





 

கருத்துரையிடுக

0 கருத்துகள்