சென்னை, மாமல்லபுரத்தில் நடை பெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என கூறியுள்ளது. தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்கு, தமிழகத்தில் இருந்து பிர்கியானந்தா, வைசாலி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இந்தியா அணியின் ஆலோசனை குழுவில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். இந்தியா சார்பில் தலா இரண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளனர். அகில இந்தியா செஸ் கூட்டமைப்பும், உலக செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பும் சேர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஒரு மாணவர், ஒரு மாணவி என இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான போட்டி தேர்வு மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக்பள்ளியில் மதுரை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று 11.06.2022 நடைபெற்றது.
மதுரைமாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் பி.டி.சேதுராமன், துணைச் செயலாளர் கே.எஸ்.சுதாகரன், மேலூர் தாலுக்கா செயலாளர் அரசப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 9 சுற்றுகளுடன் 15 வயதுக் குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் ஆண்களில் 115 மாணவர்களும், பெண்களில் 47 மாணவிகளும் பங்கேற்றனர். இப் போட்டியினை பள்ளியின் தாளாளர் மற்றும் சேர்மன் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடக்கி வைத்தனர்.
0 கருத்துகள்