மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பள்ளி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான அணியினர் பங்கேற்று களம் கண்டனர். வெற்றி பெற்ற அணியி னருக்கு பரிசு கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பை மற்றும் பரிசு தொகையை வழங்கினார். இதில் நகர செயலாளர் பூமாராஜா, பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் துரைதனராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மலர்: உசிலம்பட்டி செய்தியாளர் சூரிய பாண்டி
0 கருத்துகள்