தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை மதுரையில் தனது 15-வது புதிய கிளையை துவங்கியது


மதுரை: கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை 15-வது புதிய கிளையை மதுரையில் இன்று தொடங்கியது.

உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவத்தை, அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில்வழங்கும் நோக்கத்தில், தி ஐ ஃபவுண்டேஷன்  கண் மருத்துவ மனை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங் களில் கிளைகளை நிறுவி சேவை அளித்து வருகின்றது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் தற்பொழுது மதுரையிலும் தொடங்கியுள்ளது.

மதுரையில் இம்மருத்துவமனை 80அடி ரோடு, அண்ணா நகரில், சுமார் 20,000 சதுரடி பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு 3 அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அறைகள், 6 மருத்துவ ஆலோசனை அறைகள், 5 பரிசோதனை அறைகள், 8 ஆப்டோமெட்ரி அறைகள் நவீன கண் கண்ணாடி சேவை, மருந்தகம், அனைத்து வசதிகள் கொண்ட நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் பகல் நேர நோயாளிகளின் ஓய்வு அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை மதுரை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கு ஆரம்பகால சிறப்பு சலுகையாக இரண்டு மாதத்திற்கு இலவச முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளது.

தி ஐ ஃபவுண்டேஷனின் தலைவர் டாக்டர்.டி.ராமமூர்த்தி  கூறுகையில், தேசிய அளவில் தரமான கண் மருத்துவத்திற்கு ஓர் பூர்த்தி செய்யப்படாத தேவை இருந்து கொண்டே இருக்கிறது, மதுரை மாவட்டம் அதற்கு விதிவிலக்கு இல்லை.  மேலும்  100க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், சுமார் 200 அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட் மற்றும் 650க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறது.

தி ஐ ஃபவுண்டேஷன் தற்பொழுது மொத்தம் 15 கினைகளை நிறுவி முறையே தமிழ்நாடு,  கர்நாடக மாநிலங்களில் கண் மருத்துவத்தை சிறப்பாக அளித்து வருகிறது. மருத்துவமனையின் அனைத்து மையங்களும் நேஷனல் அக்கி ரேடேஷன் போர்ட் ஆப் ஆஸ்பிட்டல்ஸ் தொகுத்துள்ள திட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடித்து செயல்படுகின்றன.

கடந்த 35 ஆண்டுகளாக தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவ மையங்கள் மூலம் கோவை திருப்பூர், பெங்களூர், நீலகிரி, பாலக்காடு, எர்ணாகுளம், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றது. நாட்டிலேயே பல நவீன கண் சிகிச்சை முறைகளை முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெருமையையும் பெற்றுள்ளது.  பார்வை திருத்தம், கண்புரை நீக்கம் சிகிச்சை முறைகளில் முதன் முறையாக லேசர் முறையை அறிமுகப்படுத்தி, மிக துல்லியமான பார்வை பலனை பெற்று தந்த முன்னோடிகளில் ஒன்றாக திகழ்கிறது

இம்மருத்துவமனை பெரு நகரங்களில் விரிவான கண் பராமரிப்பு வசதிகளை உள்ளடக்கிய பெரிய மையங்களை அமைத்து அவைகளை சுற்றி அமைக்கப் பட்டுள்ள சிறிய மைங்கள் தேவைப்படும்போது தங்களை அணுகி அனைத்து உதவிகளையும் பெறும் வகையில் அமைந்துள்ளன. தொழில் நுட்பத்தை உபயோகிப்பதில் முன்னோடியாக திகழும் தி ஐ ஃபவுண்டேஷனின் அனைத்து மருத்துவ மையங்களும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தின் மூலம் இணைக்கப் பட்டிருப்பதால், நோயாளிகளின் பரிசோதனை அறிக்கை, மருத்துவ ஆலோசனை, ஆய்வுகள் மற்றும் அவர்களின் முழு விபரங்களையும் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் எந்த ஒரு மையத்திலிருந்தும் மருத்துவரகள் பார்த்து சிகிச்சை அளிக்க உதவுவது மட்டுமல்லாமல் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசணை அளிப்பதற்கு வழி வகுக்கிறது.

தி ஐ ஃபவுண்டேஷன் என்றும் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் ஒர் வலுவான ஆய்வு மற்றும் கல்வி துறையை உருவாக்கியுள்ளது. இக்கல்வித்துறை, மருத்துவர்கள், ஆப்டோமெட்ரிஸ்ட் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் என அனைவருக்கும் உரிய பயிற்சியை அளித்து வருகிறது. 

தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர். டி.ராமமூர்த்தி அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் அறிவியல் குழுவின் தலைவராக 6 ஆண்டு காலம் பொறுப்பு வகித்துள்ளார். தொடர்ந்து 2016 முதல் 2017 வரை அச்சங்கத்தின்  பொதுத் தலைவராகவும் நியமிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

டாக்டர்.சித்ரா ராமமூர்த்தி, தி ஐ ஃபவுண்டேஷன், மெடிக்கல் டைரக்டர். அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக பொறுப்பேற்று கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக் கைகளை ஒருங்கினைத்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்