மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அரசு விழா வாகவும் கொண்டா டப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்திலுள்ள புது விளாங்குடி திமுக சார்பில் வட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில், மனோகரன், ராமச்சந்திரன், சூச்சார், எஸ்.சண்முகம், சங்கர், டி.சி.ஐ.செல்வம், நல்லகுரும்பன், இளைஞரணி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், இதில் தொண்டர்களும், எண்ணற்ற பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்