உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டபிரச்சினையை இரு தரப்பினையும் சமாதானப் படுத்தி பிரச்சினையை சுமூகமாக பேசிதீர்ப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் விஜயலட்சுமி, டி.எஸ்.பி.நல்லு, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் கோயில் நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், காவல்துறையினர் மட்டும் கோயில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடத்தலாம் எனவும் மற்ற பிரச்சினைகளை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட இரு பிரிவினர்களும் இதற்கு உடன்பட்டு சமரசம் அடைந்தனர்.
0 கருத்துகள்