மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் எண்ணற்ற பொதுமக்கள் வந்து செல்கின்றனர் குறிப்பாக திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் என்பதால் அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்படும் ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வந்து செல்லும் மக்களின் பல்வேறு குறைகளை தீர்க்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க வழி பிறக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியது முதல் கோயில் வளாகங்கள், தனியார் நிறுவனம், ஏன்? டீ கடை முதல் குடிக்க தண்ணீர் வைக்கும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் குடிக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது.
இன்று திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாளில் கைக் குழந்தையை சுமந்துகொண்டு ஒரு பெண் பிள்ளைக்கு தாகமாக இருக்கிறது கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து விட்டது இங்கு தண்ணீர் கிடைக்குமா என்று கேட்கும்போது இல்லை என்று தான் பதில் கூற முடிகிறது.
ஆகவே எண்ணற்ற பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் மக்களின் தாகத்தை தீர்க்க மாவட்ட ஆட்சித்தலைவர் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என அங்கு வரும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எண்ணற்ற மக்களின் குறைகளைத் தீர்க்கும் மாவட்ட ஆட்சியர் மக்களின் தாகத்தை தீர்ப்பாரா…..?
0 கருத்துகள்