மதுரையில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளூர் சிலை முன்பு நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் களுக்கு 77 மாத அகவிலைப்படி நிலுவை உடனே வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீடுதிட்டத்தை போக்குவரத்துத்துறை ஓய்வூதியர் களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் வி‌.பிச்சைராஜன் தலைமை வகித்தார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆர்.தேவராஜ், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட செயலாளர் அ.பாலமுருகன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் பி.சுப்பையா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்