மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையம் சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வுக்காக மாபெரும் மினி மாரத்தான் போட்டி

மதுரை வடக்கு ரோட்டரி சங்கம் மற்றும் ஒத்தக்கடை காவல்நிலையம் சார்பில், போக்குவரத்து விழிப்புணர் வுக்காக மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் இப்போட்டியினை கொடி அசைத்து துவக்கிவைத்தார். மேலும் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலா ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசாக தலா ரூ. 10 ஆயிரமும், 3-வது பரிசாக தலா  ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. 4வது முதல் 13-வது பரிசுகள் (10 பேருக்கு) தலா ரூ.1,000மும், 14-வது முதல் 63-வது பரிசுகள் (50 பேருக்கு) டீ-சர்ட், சேலை மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களில் லக்கி வின்னர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. 





கருத்துரையிடுக

0 கருத்துகள்