திருமங்கலத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஆய்வு செய்ய வலியுறுத்தி சமூக ஆர்வலர் கோரிக்கை

 

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பி.கார்த்திக் திருமங்கலம் குடிமைப்பொருள்கள் வட்டாட்சியர் வீரமுருகன், நுகர்வோர் மையம் தலைவர் பி.ஜெயபாலன் ஆகியோரிடம் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாளில் மனு ஒன்று அளித்தார் அம்மனுவில், திருமங்கலம் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டாம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்களை  அலைக்கழிக்க வைப்பதாகவும், இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி நானும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் இதனால் பல பேர் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு போகாமல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியுமா எனவும் ரேஷன் கடையில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெயில் புழுக்கள் இருக்கிறது மேலும் பச்சரிசி வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே வழங்குகின்றனர் ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வாங்குவதே போராட்டமாக இருக்கிறது.
 பல நேரங்களில் பொருட்கள் வாங்குவதற்கு சென்றால் கடை பூட்டியிருக்கிறது கேட்டால் லோடு வரவில்லை என்று கூறுகின்றனர் ஏதாவது ஒரு காரணங்களைக் கூறிக் கொண்டு தொடர்ந்து இதுபோல் மக்களை அலையவிடும் எண்ணத்திலேயே ஊழியர்கள் உள்ளனர். இன்று போய் நாளை வாருங்கள் என்ற பதில்தான் அதிகமாக கூறுகின்றனர். வாங்காத பொருள்களுக்கு வாங்கி விட்டதாக குறுஞ்செய்திகள் வருகின்றது. இது இந்த கடையில் மட்டுமின்றி திருமங்கலத்தில் உள்ள சில கடைகளிலும் இதே போல் நடக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே திருமங்கலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு பொருட்களை சரியாக விற்பனை செய்கிறார்களா என்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கோரிக்கையை மனுவாக அளிக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்