பிளஸ் 2 பொதுத்தோ்வு மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற மொழிப் பாடத்துக்கான தோ்வை எழுத கடலூா் மாவட்டத்தில் 244 பள்ளிகளைச் சோ்ந்த 5,136 மாணவா்கள், 15,842 மாணவிகள் என மொத்தம் 30,978 போ் அனுமதி பெற்றிருந்தனா். மேலும், தனித்தோ்வா்களாக 297 போ் தோ்வு எழுதுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் 121 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. பல்வேறு இடங்களில் தோ்வு எழுதுவோரை அந்தந்தப் பள்ளி ஆசிரியா்கள் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனா். கடலூரில் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து, எழுதுகோல், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தாா்.
தோ்வு தொடங்கிய நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த 31,275 பேரில் 913 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்கு வரவில்லை. மீதமுள்ள 30,362 போ் தோ்வில் பங்கேற்று எழுதினா்.
0 கருத்துகள்