கொடைக்கானலில் மதுரை வாரியர்ஸ் சாம்பியன்ஷிப் கராத்தே, சிலம்பம், யோகா போட்டி 2025 மூன்று நாட்கள் நடைபெற்றது. எஸ்டி சிலம்பம் மற்றும் யோகா தற்காப்பு கலை கல்வி கழகத்தின் தலைவர் மாஸ்டர் சிவபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மதுரை ஸ்ரீ ஜெயசக்தி மருத்துவமனையின் நிறுவனர் ஜெயவீரன் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில், மதுரை விளாங்குடி எஸ்டிஎம்ஏ அகாடமி மாணவர்கள், லியோ முத்துப் பாண்டி அகாடமி மாணவர்கள், லிம்கா ரபீக் மாஸ்டர் மாணவர்கள், நாயகம் அப்துல் பாரி மாஸ்டர் மாணவர்கள் மற்றும் டிசி பிருந்தா மாஸ்டர் மாணவர்கள் பரிசுகளை பெற்றனர்.
0 கருத்துகள்