ஸ்ரீ விசாலாட்சி மில்ஸ் உயர்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ! - தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா


 தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்டம் சார்பில் மதுரை ஸ்ரீ விசாலாட்சி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைப்பெற்றது. இவ் விழாவில் மாவட்டத் தலைவர் கணேஷ், பள்ளி தலைமை ஆசிரியை தங்கேஸ் வரிக்கு சால்வை அணிவித்து பாராட்டு கேடயம் வழங்கினார். 

ஆசிரியர்கள் கமலகீதா, சபிதா, அமுதா, தனம், காளிதாஸ், பள்ளி உதவியாளர்கள் பாலாஜி, ஸ்ரீதர் ராஜா உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கப் பட்டது. 

திருமங்கலம் அகத்தியர் அன்னதான அறக்கட்டளையின் நிறுவனர் முத்துப் பாண்டி, அறக்கட்டளை நிர்வாகி அமுதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கவிதா, கௌரவ ஆலோசகர் பாலா, சௌகத்அலி, இணைச் செயலாளர்கள் கார்த்திக், வெங்கடேஷ், மணிகண்ட ராஜா மற்றும் உறுப்பினர் அசோக் ஆகியோர் விழாவிற்கான ஏற் பாடுகளை செய்திருந்தனர். 

இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்