மதுரை, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் தமிழக அரசின் அரசாணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி சாலை மறியல் செய்ய வந்த தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினரை காவல்துறையினர் சமரசம் செய்தனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ, மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் கள்ளப்பட்டி இரா.சௌந்தர பாண்டியன், மாவட்ட தலைவர் கே.எஸ்.பாண்டி, மாவட்ட செயலாளர் எஸ்.ஓ.பி. அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பஸ் மறியல் செய்ய வந்தவர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
மதுரை மலர் உசிலம்பட்டி செய்தியாளர் சூரியபாண்டி
0 கருத்துகள்