மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர தி.மு.க சார்பாக கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி சாலை முருகன் கோவில் அருகில் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம். மணிமாறன் தலைமையில் தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார், தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி, எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் ஆகியோர் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கிப்பேசினார்கள்.
திமுக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு திட்டங்கள், பள்ளிமாணவிகளுக்கு உதவித் தொகை வழங்குவது குறித்தும் விளக்கிப் பேசினார். இதில், மதுரை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஏழுமலை ஜெயராமன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள், உசிலம்பட்டி நகர் கழக, ஏழுமலை பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மதுரை மலர்: உசிலம்பட்டி செய்தியாளர் சூரியபாண்டி
0 கருத்துகள்