இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

 இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இந்திய மாதர் தேசிய சம்மேளனம், மதுரை மாவட்ட புறநகர் பொறுப்புச் செயலாளர், கே.நாகஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநில துணைச்செயலாளர் எம்.கண்ணகி கண்டன உரையாற்றினார், என்.எஃப்.ஐ.டபுள்யூ மாநில குழு உறுப்பினர் எஸ்.சூரியகலா முன்னிலை வகித்தார், ஆர்.விஜயா, பி.மூக்கம்மாள், பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் விமலா, லோகேஸ்வரி, மாலா,செல்வி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஐம்பதிற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மண் அடுப்பு மற்றும் மண்பானைக்கு சூடம், பத்தி, சாம்பிராணி பொருத்தி அதன் முன்பு பூஜை செய்தும், அதன் பின்னர்  சமையல் கேஸ் சிலிண்டர்க்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தும், பறை அடித்து மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார்கள்.



 


கருத்துரையிடுக

0 கருத்துகள்