குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு (MSME) கடன் வழங்கல் மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு முன்னணி தரவு தொழில்நுட்ப, வங்கிசாரா நிதி நிறுவனமான யூக்ரோ கேப்பிட்டல், தமிழ்நாடெங்கிலும் 15 புதிய கிளைகளை தொடங்கியுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் நிதிசார் சேவைகளையும் மற்றும் இறுதிநிலை வழங்கலையும் பெற்று பயனடைய வேண்டு மென்று இதன்மூலம் இந்நிறுவனம் வலுப்படுத்தியிருக்கிறது. இந்த விரிவாக் கத்தின் மூலம் தமிழ்நாட்டில் யூக்ரோ கேப்பிட்டலின் கிளைகள் 63-ஆக உயர்ந்திருக்கின்றன. இதன்மூலம் இந் நாட்டில் இந்நிறுவனத்தின் அதிக கிளைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ் கிறது.
செங்கல்பட்டு, மேட்டுப்பாளையம், சூலூர், உசிலம்பட்டி, விருதுநகர், பண்ரூட்டி, பாண்டிச்சேரி, விருத்தாச்சலம், ஆத்தூர், சேலம், வாழப்பாடி, தஞ்சாவூர், ஆம்பூர், ஆரணி மற்றும் குடியாத்தம் ஆகிய நகரங்களில் புதிய கிளைகள் தொடங்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் இயங்கும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் / நிதித் தேவைகள் இதுவரை சரியாகப் பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும். கட்டுபடியாகக்கூடிய எளிய வட்டி விகிதங்களில் கடன் வசதியைப் பெற்று தங்களது பிசினஸ் நிறுவனங்களை விரிவுபடுத்த இதுவரை குறைவான நிதி சேவையைப் பெற்று வருகின்ற குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுகின்ற யூக்ரோ கேப்பிட்டலின் உறுதியான செயல்திட்டத்தை இந்த முன்னெடுப்பு நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களின் சூழல் அமைப்பானது, இந்தியாவிலேயே துடிப்பும், உயிரோட்டமாக கொண்டதாக இருப்பதுடன், மாநில மற்றும் தேசிய பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. 4.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்தியாவின் எம்எஸ்எம்இ துறையில் 8% பங்கினை கொணடுள்ள மாநிலங்களின் தரவரிசையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. பதிவு செய்யப்பட்ட மொத்த பணியாளர்களது எண்ணிக் கையில் ஏறக்குறைய 10.9% பங்கினை இது கொண்டிருக்கிறது. ஜவுளி, ஆட்டோ மொபைல்ஸ், தோல் பொருட்கள், மருந்து தயாரிப்பு, இலகுரக பொறியியல் என மாறுபட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் இம்மாநிலம், புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த மையமாக இருந்து வருகிறது.
யூக்ரோ கேப்பிட்டல் – ன் நுண் தொழில் நிறுவனங்களுக்கான தலைமை பிசினஸ் அதிகாரி திரு, J.சத்தியன், கிளைகள் விரிவாக்கம் குறித்துப் பேசுகையில், “யூக்ரோ கேப்பிட்டல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநிலம் எப்போதுமே மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இம்மாநிலத்தின் எம்எஸ்எம்இ துறையின் செயல்திறன் மீது நாங்கள் கொண்டிருக்கும் தளராத நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இந்த 15 கிளைகளின் சேர்க்கை இருக்கிறது. மேம்பட்ட தரவுப் பகுப்பாய்வு மற்றும் புத்தாக்கமான கடன்வழங்கல் மாதிரிகளை திறம்பட பயன்படுத்துவதன் வழியாக, சிறு நிறுவனங்களுக்கு இருந்து வரும் கடன் இடைவெளியை நிரப்புவதே எமது நோக்கமாகும். இதன்மூலம் அந் நிறுவனங்களின் வளர்ச்சி பயணத்திற்கு பங்களிப்பை வழங்குவதே எமது குறிக்கோள். நிதிசார் உள்ளடக்க நடவடிக் கையானது, நாட்டின் தொலைதூர அமைவிடங்களையும் சென்றடைவதை எமது விரிவாக்க நடவடிக்கை உறுதி செய்யும். உள்ளூர் தொழில் நிறுவனங்கள் திறனதிகாரம் பெறு வதையும், பிராந்திய அளவில் வேகமான முன்னேற்றத்தை எட்டவும் இது வழிவகுக்கும்.” என்று கூறினார்.
புதிய கிளைகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் யூக்ரோ கேப்பிட்டலின் கிளைகளது வலையமைப் பானது, நிதியாண்டு 25-ன் இறுதிக்குள் 10000–க்கும் கூடுதலான, குறு, சிறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பிராந்தியத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை சாத்தியமாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு இச்சேவை வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. சிறு தொழில் – வணிக நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் மற்றும் அவைகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் யூக்ரோ கேப்பிட்டலின் கிளைகள் முழு திறன் கொண்டவையாக செயல்படும். ₹5 இலட்சத்திலிருந்து, ₹5 கோடி வரையிலான பிசினஸ் கடன்களை யூக்ரோ கிளைகள் வழங்குகின்றன.
இல்லங்களிலும், பிசினஸ் நிறுவனங் களிலும் மேற்கூரை சூரிய ஒளி மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான கடன் களை மற்றும் சாதனங்களை வாங்கு வதற்கான நிதியுதவி மற்றும் இயந்திரங் களுக்கான கடன் திட்டத்தையும் இந்நிறுவனம் வழங்கியிருக்கிறது. நிறுவன வளர்ச்சிக்கான சாதனங்களில் முதலீடு செய்யவும், செயல்பாட்டை விரிவாக்கவும் மற்றும் புதிய சந்தைகளில் கால் பதிக்கவும் பிசினஸ் நிறுவனங் களுக்கு இத்தகைய கடன்கள் உதவு கின்றன.
இந்தியாவின் பொருளாதார கட்டமைப் பிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வரும் தமிழ்நாட்டின் எம்எஸ்எம்இ துறையானது, சூழலுக்கேற்றவாறு தகவமைக்கும் திறனையும், பாதிப் பிலிருந்து மீண்டெழும் ஆற்றலையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. தனது சேவையின் மூலம் கடன் பெறுவதில் நிலவும் இடைவெளிகளைப் பூர்த்தி செய்வது மற்றும் நிதிசார் கல்வி அறிவை ஊக்குவிப்பது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் இத்துறையின் தொழில்முனைவு ஆர்வத்தையும், செயல்பாட்டையும் ஆதரிப்பது யூக்ரோ கேப்பிட்டலின் கிளைகள் விரிவாக்கப்படுவதன் நோக்க மாகும். இம்மாநிலத்தில் தனது வலுவான இருப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வினையூக்கியாக திகழ்வது மற்றும் தமிழ்நாட்டின் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு நம்ப கமான தோழனாக செயல்படுவது என்ற தனது அர்ப்பணிப்பு உணர்வை யூக்ரோ கேப்பிட்டல் மறுஉறுதி செய் திருக்கிறது.
தமிழ்நாட்டில் தனது செயல்தடத்தை யூக்ரோ கேப்பிட்டல் தொடர்ந்து வலுப் படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு சிறு தொழில் நிறுவனமும் வளர்ச்சி யடையவும், வெற்றி காணவும் தேவையான வாய்ப்பைக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைப்புத் தன்மையுள்ள, அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பை வழங்குகின்ற ஒரு சூழலமைப்பை பேணி வளர்ப்பது மீது அதன் கூர்நோக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.
0 கருத்துகள்