கணைய புற்றுநோயாளிகள் இந்தியாவில் வெறும் 10-20% நோயாளிகளே உகந்த நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்று தேடி மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். எஞ்சிய நபர்களோ, எந்த வகையான சிகிச்சையும் பலனளிக்காத நேரத்தில் காலம் கடந்து மிகத்தாமதமாக சிகிச்சைக்கு வருவதாக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்மத்தமாக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முது நிலை நிபுணர் மற்றும் குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இணை ஆலோசகர் டாக்டர். மணிரத்தினம், முதுநிலை நிபுணர் மற்றும் மருத்துவ புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்னம், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அழகம்மை, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர். டாக்டர். சீனிவாசன் ராமச்சந்திரன் ஆகியோர் கூறுகையில், கணைய புற்றுநோய் என்பது, புற்றுநோய்களுள் அதிக ஆபத்தானவைகளுள் ஒன்றாக கருதப் படுகிறது. மலக்குடல் புற்றுநோயில் உயிர்பிழைப்பு விகிதம் 40-50% ஆக இருக்கிற நிலையில், கணைய புற்றுநோயாளிகள் பாதிப்பிற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 12% ஆக இருக்கிறது. உலகம் முழுவதும் தினமும் 1200 பேர் கணையப் புற்றுநோய் கண்டறியப் படுகின்றனர். கணைய புற்றுநோய் மீதான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் இத்தருணத்தில் மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கவலையளிக்கும் இந்த விவரங்களை தெரிவித்தனர்.
சிகிச்சையளிப்பதற்கு கணைய புற்று நோயை மிகவும் கடினமானதாக ஆக்கும் ஒரு முக்கியமான காரணியாக இருப்பது இந்தியாவில் வெறும் 10-20% நோயாளிகளே உகந்த நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்று தேடி மருத்துவ மனைகளுக்கு வருகின்றனர். எஞ்சிய நபர்களோ, எந்த வகையான சிகிச்சையும் பலனளிக்காத நேரத்தில் காலம் கடந்து மிகத்தாமதமாக சிகிச்சைக்கு வருகின்றனர்.” “கணைய புற்றுநோயில் இரு வகைகள் இருக்கின்றன. முதலாவது, கணையத்தில் உருவாகின்ற புற்றுநோய், இரண்டாவது, சிறுகுடலில் கணைய மற்றும் பித்தநாள குழாய் சந்திக்கிற சிறுகுடலில் இருக்கும் சிறிய திறப்பான வேட்டரின் ஆம்புலாவில் உருவாகும் புற்றுநோயாகும்.மேற்கத்திய நாடுகளில் 80% கணைய புற்றுநோய்கள், கணையத்தோடு நேரடி தொடர்புடையதாக இருக்கின்றன; ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறாக 80% பாதிப்புகள் ஆம்புலரி புற்றுநோயாக தோன்றி கணையத்திற்கு பரவுகின்றன. இத்தகைய போக்கு இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. ஆம்புலரி கணைய புற்றுநோயில் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைக்கும் விகிதம், கணைய புற்றுநோயோடு ஒப்பிடுகையில் அதிக மாகவே இருக்கிறது.கணைய புற்றுநோயில் இது 5-10% இருக்கும் நிலையில் ஆம்புலரி கணைய புற்றுநோயில் 50%-க்கும் அதிகமாக உயிர்பிழைப்பு விகிதம் காணப்படுகிறது,” புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், உடல் பருமன், 65 வயதுக்கு மேற்பட்ட வயது, குடும்ப வரலாறு, மேம்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு ஆகியவை அடங்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் போன்ற மேற்கத்திய வாழ்க்கைமுறை சார்ந்த உணவுப்பழக்கங்கள் இந்தியாவிலும் கணைய புற்றுநோயை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகைப் பிடித்தலும், மதுபானம் அருந்தலும் இப்புற்று நோய்க்கு குறிப்பிடத்தக்க இடர் காரணி களாக இருந்து வருகின்றன,” என்று குறிப்பிட்டனர்.
“கணைய புற்றுநோயானது, கணிசமாக வளர்ந்து முதிர்ச்சியடையும் வரை பெரும் பாலும் அறிகுறிகள் வெளிப்படுத் தாமலேயே இருக்கும். காரணம் விளக்கமுடியாதவாறு உடல் எடை குறைதல், அடிவயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் புதியதாக நீரிழிவு தோன்றுவது போன்ற பொதுவான அறிகுறிகள் நோய் முற்றிய நிலைகளிலேயே வெளிப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்க்கு சிகிச்சை உரிய நேரத்தில் நடவடிக்கையும், உரிய சிகிச்சையும் மேற்கொள்வது பயனளிப்பதாக இருக்கும்.” சிடி ஸ்கேன்கள், எம்ஆர்ஐ மற்றும் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டு (EUS) போன்ற மேம்பட்ட நோயறிதல் உத்திகள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில் முன்னதாகவே நோய் பாதிப்பு கண்டறியப்படுவதை இப்போது ஏதுவாக்கியிருக்கின்றன,” என்று மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்