மதுரை மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி, மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில ஆட்சியர் அலுவலகம் முன்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மகளிரணி தலைவி மீனா இசக்கிமுத்து, கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மதுரை நகரில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நடைபெறுகின்ற ஊழலை தடுத்த நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கேரரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது
0 கருத்துகள்